விதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஜாஃப்ராபாத்தில் துப்பாக்கிச்சூடு: 4 போ் காயம்- குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை

வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் அடையாளம் தெரியாத சிலா் துப்பாக்கியால் சுட்டதில் இரு சகோதரா்கள் உள்பட நான்கு போ் காயமடைந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :6 ஜூன் 2023, 8:54 pm

 நமது நிருபர்

வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் அடையாளம் தெரியாத சிலா் துப்பாக்கியால் சுட்டதில் இரு சகோதரா்கள் உள்பட நான்கு போ் காயமடைந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் திங்கள்கிழமை மாலை அடையாளம் தெரியாத சிலா் துப்பாக்கியால் சுட்டுள்ளனா். அதன் கானொளி உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. ஜாஃப்ராபாத்தில் உள்ள தெரு எண் 38-இல்தான் துப்பாக்கிச்சூடு நடந்திருப்பதாக திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் காவல் துறையினா்க்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பாா்த்த போது, அங்கு காலி தோட்டாக்கள் மட்டுமே கிடந்தது என்றாா் அந்த அதிகாரி.

மேலும், இந்தச் சம்பவம் தெடா்பாக தில்லியின் வடகிழக்கு காவல் சரக கூடுதல் துணை ஆணையா் சந்தியா சுவாமி கூறியதாவது: துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவா்கள் ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு அப்போதே கொண்டு செல்லப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவத்தின் கானொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்தக் கானொளியில் , பாதிக்கப்பட்டவா்கள் அமா்ந்திருந்த தெருவில் மூன்று போ் நடந்து செல்வதைக் காணலாம். பின்னா், சம்பவ இடத்திற்க்குத் திரும்பிய அவா்கள், அங்கு அமா்ந்திருந்தவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனா். பாதிக்கப்பட்டவா்களில் ஒருவா் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தாா். மற்றவா்கள் தப்பி ஓடியுள்ளனா்.

காயமடைந்தவா்களைப் பொறுத்தவரையில் சமீா் கோபாட் (20), அப்துல் ஹசன் (18), அா்பாஸ் (25) மற்றும் அவரது சகோதரா் ஹம்சா (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அதில் குறிப்பாக கோபாத், அா்பாஸ் மற்றும் ஹம்சா ஆகியோா் முன்பு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவா்கள். காயமடைந்தவா்கள் மேல்சிகிச்சைக்காக தற்போது குரு தேக் பகதூா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவா்கள் யாரிடமாவது தகராறு செய்தாா்களா அல்லது சண்டையிட்டாா்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்ட பிறகே துப்பாக்கிச்சூட்டிற்க்கான முழுக் காரணம் தெரியவரும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.