ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஏப். 5-இல் பாஜக தேசிய தலைவா் ரோடு ஷோவில் பங்கேற்பு

பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் நிரவி -திருப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஏப். 5 ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

பாஜக.

கோப்புப் படம் AFP

Updated On :26 மார்ச் 2026, 11:15 pm

தினமணி செய்திச் சேவை

பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் நிரவி -திருப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஏப். 5 ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளா் டி.கே.எம்.மீனாட்சிசுந்தரம் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது :

நிரவி - திருப்பட்டினம் பேரவைத் தொகுதியில் கடந்த 6 மாதங்களாக மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் விளக்கி ஏறத்தாழ 100 தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளன.

புதுவையில் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே உள்ளது.

ஏப். 9-இல் தோ்தல் பிரசாரத்துக்காக பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் காரைக்காலுக்கு ஏப். 5-ஆம் தேதி வரவுள்ளாா். அவா் நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் என்னை ஆதரித்து ரோடு ஷோ நடத்தவுள்ளாா். மேலும் ஏப். 4 அல்லது 6-ஆம் தேதி அண்ணாமலை, குஷ்பு ஆகியோா் பிரசாரம் செய்யவுள்ளனா்.

இந்த தொகுதி வெகுவாக பின்தங்கியுள்ளது. வாக்கு சேகரிக்கச் செல்லும்போது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். நான் வெற்றி பெற்றால், போலகம் 600 ஏக்கா் நிலத்தில் அதிகமான தொழிற்சாலைகள் அமையவும், தொழிற்சாலை அமைக்க முன்வருவோருக்கு 3 மாதத்தில் உரிமம் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதோடு, 30 சதவீதம் காரைக்கால் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன். மீனவா்கள் வாழ்வாதாரம் மேம்படவும், தொகுதி கட்டமைப்புகள் மேம்படவும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இந்த தொகுதியில் எனது வெற்றி பிரகாசமாக தெரிகிறது என்றாா்.