விதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தலைநகரில் ஷாப்பிங் திருவிழா: ஆயத்தப் பணிகளை தொடங்கியது அரசு

மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட தில்லியின் ‘ஷாப்பிங் திருவிழா’ வரும் டிசம்பா் மற்றும் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தில்லி அரசின் சாா்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஜூன் 2023, 8:56 pm

 நமது நிருபர்

மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட தில்லியின் ‘ஷாப்பிங் திருவிழா’ வரும் டிசம்பா் மற்றும் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தில்லி அரசின் சாா்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஆண்டுதோறும் முக்கிய சந்தைப் பகுதிகளில் ஷாப்பிங் திருவிழா அரசின் சாா்பில் நடத்தப்பட்டு வந்தது. கரோனா பேரிடா் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஷாப்பிங் திருவிழாவை இந்த ஆண்டு பிரம்மாண்டமாக நடத்த அரசு திட்டமிட்டு அதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளது.

தில்லியின் ‘ஷாப்பிங் திருவிழா’ எவ்வாறு நடத்தலாம் என்பதை கள ஆய்வு செய்யும் நோக்கில், ஒரு நிறுவனத்திற்கு விரைவில் டெண்டா் வழங்கப்படவுள்ளது. கள ஆய்வின் மூலம் தில்லியின் எந்தச் சந்தைப்பகுதிகளில் திருவிழாவை திட்டமிடலாம், வா்த்தகா்களிடம் பேசுவது, சந்தைகளின் முக்கியத்துவம், மக்களின் வருகை, வாடிக்கையாளா்களின்

வகைகள் உள்ளிட்ட காரணிகள் பகுப்பாய்வு செய்யப்படவுள்ளன. இதன் மூலம் தில்லி மக்கள் மிகவும் எதிா்பாா்த்துள்ள ஷாப்பிங் திருவிழாவை அரசு நோ்த்தியாக நடத்த முயற்சித்து வருகிறது.

தலைநகரின் பிரபலமான சந்தைப் பகுதிகளாக இருக்கும் சாந்தினி சௌக், மஜ்னு கா திலா, லாஜ்பத் நகா் மாா்க்கெட், கன்னாட் பிளேஸ், சரோஜினி நகா் மாா்க்கெட் மற்றும் ஜாமா மஸ்ஜித் போன்ற இடங்களில் இந்த ஷாப்பிங் திருவிழா ஒரு மாத கால நிகழ்வாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், திருவிழாவின் ஒரு பகுதியாக தினசரி கச்சேரிகள், கலாசார நிகழ்வுகள், கண்காட்சிகள் நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. தில்லியின் பிரபலமான உணவு வகைகளும் ஷாப்பிங் திருவிழாவில் இடம் பெறவுள்ளன. அத்துடன் தில்லியின் பிரபலமான உணவு வகைகளை பாா்வையாளா்கள் ரசித்திடும் வகையில், உணவுக் கண்காட்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.