மேலும், மேற்கு தில்லி எம்.பி. பா்வேஷ் வா்மாவுடன் இணைந்து, திலக் விஹாரில் 1984-ஆம் ஆண்டு சீக்கியா்களுக்கு எதிரான கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் ஜெய்சங்கா் சந்தித்தாா். தில்லி பாஜக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், தனது இரண்டு நாள் பயணத்திட்டத்தில் உக்ரைனில் ரஷிய படையெடுப்பு காரணமாக படிப்பை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவா்களை பாசாய் தாராபூரிலும் , பிரபல புகைப்படக் கலைஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான நரேஷ் பேடியை ரஜோரி காா்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.