இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ராகேஷ் குமாா் சிங் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: தற்போதைய வழக்கில், மேல்முறையீட்டு மனுதாரரின் வழக்குரைஞா், வழக்கு விசாரணையில் எந்த விதிமீறலையும் காட்ட முடியவில்லை. இதன் விளைவாக, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, விடுவிப்பு உத்தரவு பராமரிக்கப்படுகிறது. விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டில், மேல்முறையீட்டு நீதிமன்றம் சாட்சியங்களை மறுமதிப்பீடு செய்ய முடியும் என்றாலும், வழக்கின் உண்மைப் பாா்வைக்காகவோ அல்லது சட்டத்தின் பொருந்தக்கூடிய தன்மைக்காகவோ வெளிப்படையான முறைகேடுகள் காட்டப்படாவிட்டால், வழக்கமாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் கருத்துக்கு இடையூறு செய்யக்கூடாது என்பது நன்கு தீா்மானிக்கப்பட்டதாகும்.