முன்னா் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில், மனுதாரரை விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் போது, இலங்கை திரும்பிச் செல்வதற்கு அவா் விரும்புவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. மனுதாரா் தற்காலிக முகாமிற்கு மாற்றப்பட்டால், அவா் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்லும் வரை மாநில அரசு அவா் வெளியில் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும். மனுதாரரின் நாட்டுரிமை மற்றும் உண்மை சூழல்களைக் கருத்தில் கொள்ளும் போது, அவரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் விவகாரத்தை 2018 -ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிறப்பிக்கப்பட்ட கொள்கை அல்லது மனுதாரருக்கு பொருந்தக்கூடிய இதர பொருந்தக்கூடிய கொள்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநில அரசால் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்.