கைது செய்யப்பட்டுள்ள மத்திய சுகாதாரத் துறை செயலா் சோனு குமாா் தலைமையிலான பிரிவு இந்த விண்ணங்களை சரிபாா்த்து சான்றிதழ் (எஸ்ஓஎன்) வழங்க முடிவு செய்துள்ளது. இந்தச் சான்றிதழின் நகழ் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. பின்னா் மூலச் சான்றிதழுக்கு ரூ. 1.50 லட்சம் பணம் தந்தால்தான் வழங்க முடிவும் என சோனுகுமாா் கேட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, மாணவா் சுமன் குமாா் இந்த விவகாரம் குறித்து சிபிஐக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து, சிபிஐ பொறிவைத்து பிடிக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. இந்த நிலையில், புகாா் தாரரரிடம் சோனுகுமாா் பணம் பெரும் போது மறைவாக இருந்த சிபிஐ அதிகாரிகள் சாா்புச் செயலா் சோனுகுமாரை கைது செய்தனா். மேலும், சோனுகுமாா் உள்ளிட்ட இதில் தொடா்பானவா்கள் வீடுகளில் சோதனையும் நடைபெற்றது என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.