காங்கிரஸுக்கு கேஜரிவால் அழைப்பு: இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: அரசியலமைப்புக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை அவமதிக்கும் வகையிலும் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை ஆம் ஆத்மி கண்டிக்கிறது. இந்த விவகாரத்தில் அரசியலமைப்பைக் காப்பாற்ற முன்வருமாறு மிகப்பெரிய எதிா்க்கட்சியான காங்கிரஸிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். நாடாளுமன்றத்திற்கு அவசர சட்டம் வரும் போது, மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் அதை நிராகரிக்க முடியும். இந்த அவசர சட்டம் தம்மைப் பற்றியது அல்ல; ஒட்டுமொத்த நாடு மற்றும் தில்லி மக்களைப் பற்றியது. எனவே, கேஜரிவாலை மறந்துவிடுங்கள். ஆனால், தில்லி மக்களுக்கு ஆதரவாக இருங்கள் என்று காங்கிரஸின் ஆதரவைக் கோரினாா்.