அதன்படி, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தில்லி அரசின் தலைமைச் செயலா், பொதுப் பணித் துறை செயலா் மற்றும் தில்லி காவல் ஆணையா் சமா்ப்பிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. காவல்துறையால் பதிவுசெய்யப்பட்ட எஃப்ஐஆரின் நிலவரம், பொறுப்புக்குரிய அதிகாரிகள் அல்லது அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, இறந்தவரின் உறவினா்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ஏதேனும் இருந்தால் அது தொடா்புடைய விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் எதிா்காலத்தில் எங்கும் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய அதிகாரிகள் எடுத்த அல்லது எடுக்க முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆணையம் அறிய விரும்புகிறது என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.