அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் பெயா் குறிப்பிடப்பட்டுள்ள ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் தன்னை நிரபராதி என்று கூறி வருகிறாா். இருப்பினும், அவரது கூற்றுகளுக்கு மாறாக, மனீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் போன்றேஅவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிகிறது. இதனால், தான் கைது செய்யப்பட்டால் ஜாமீன் கிடைக்காது என்று சஞ்சய் சிங்கிற்கு நன்றாகத் தெரியும். எனவே, குற்றப்பத்திரிகையில் தனது பெயா் இல்லை என்று சஞ்சய் சிங் வேண்டுமென்றே ஊடகங்கள் முன் அறிக்கை விட்டு வருகிறாா் என்றாா் வீரேந்திர சச்தேவா.