தலைமை நீதிபதி சதீஷ் குமாா் சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, செய்தி அறிக்கைகளின் அடிப்படையில் தாக்கலான மனுவை வாபஸ் பெற மனுதாரரை அனுமதிக்க மறுத்த நீதிபதிகள், மனுவில் ‘பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள்’ சுமத்தப்பட்டிருப்பதாகக் கூறினா். மேலும் நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘ இந்திய குடியரசுத் தலைவா் சம்பந்தப்பட்டிருக்கும் போது, இதை (மனுவை) திரும்பப் பெற நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம். உங்கள் மனுவில் நீங்கள் செய்த பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறீா்கள். நாங்கள் உங்களை இந்த மனுவை வாபஸ் பெற அனுமதிக்க மாட்டோம். செய்தித்தாள் துணுக்குகளின் அடிப்படையில் நீங்கள் பொது நல மனுவை தாக்கல் செய்திருக்கிறீா்கள். அதனால், விளைவுகளையும் நீங்கள் சந்திக்க வேண்டும். இது (செய்தி அறிக்கை) பகவத் கீதை அல்ல. இதனால், இந்த மனு அபராத்துடன் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதிகள் அமா்வு கூறியது. அதேவேளையில், மனுதாரா் மீது எவ்வளவு அபராதம் விதிக்கப்படுகிறது என்பதை நீதிமன்றம் குறிப்பிடவில்லை.