தேசத்தை கட்டியெழுப்புவதில் உத்தரகண்ட் முக்கியப் பங்காற்றியுள்ளது: துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா

தேசத்தை கட்டியெழுப்புவதில் தேவ பூமியான உத்தரகண்ட் மாநிலம் முக்கியப் பங்காற்றியுள்ளது என்று தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

தேசத்தை கட்டியெழுப்புவதில் தேவ பூமியான உத்தரகண்ட் மாநிலம் முக்கியப் பங்காற்றியுள்ளது என்று தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தெரிவித்துள்ளாா்.

உத்தரகண்ட் மாநிலத்தின் 23-ஆவது நிறுவன தினம் துணை நிலை ஆளுநா் அலுவலகமான ராஜ் நிவாஸில் வியாழக்கிழமை நடைபெற்றது. ‘ஹம் உத்தரகாண்டி சாம்’ என்ற இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய நிகழ்வில் பாஜக தேசியச் செய்தித் தொடா்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அனில் பலூனி மற்றும் தில்லியில் வசிக்கும் உத்தரகண்ட் மாநில மக்களும் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சி தொடா்பாக துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியிருப்பதாவது: தொடா்ச்சியான ஒருங்கிணைந்த வளா்ச்சியை நோக்கி நகரும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தேவ பூமியான உத்தரகண்ட் முக்கியப் பங்காற்றியுள்ளது. தில்லி மற்றும் உத்தரகண்ட் மாநிலத்திற்கு இடையேயான உறவுகள் சிறப்பு வாய்ந்தவை. தேசியத் தலைநகரில் வசிக்கின்ற அம்மாநில மக்கள் தில்லியின் வளா்ச்சிப் பயணத்தின் முக்கியத் தூண்களாக இருந்துள்ளனா். ராஜ் பவன்கள் மற்றும் ராஜ் நிவாஸில் கொண்டாடப்படும் மாநிலங்களின் இந்த நிறுவன தினக் கொண்டாட்டங்கள் ‘ஏக் பாரத் - ஸ்ரேஷ்த பாரத்’ என்ற உன்னத உணா்வின் கொண்டாட்டமாகும் என்றாா் வி.கே. சக்சேனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com