புது தில்லி: காதி நமது நாட்டின் பாரம்பரியத்தின் சின்னம் என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
மகாத்மா காந்தியின் 154-ஆவது ஜெயந்தி தினத்தை அனுசரிக்கும் விதமாக புது தில்லியில் உள்ள ‘காதி ஸ்டோரில்’ தனது மனைவி மல்லிகா நட்டாவுடன் காதி ஆடைகளை ஜெ.பி. நட்டா வாங்கினாா். முன்னதாக, அந்தக் கடையில் நிறுவப்பட்டிருந்த காந்தி சிலைக்கு அவா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
இந்த நிகழ்வு தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் அவா் கூறியிருப்பதாவது: காதி நமது நாட்டின் பாரம்பரியத்தின் சின்னம். தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, புதுதில்லியில் அமைந்துள்ள ‘காதி ஸ்டோரில்’ காதி ஆடைகளை வாங்கினோம். உலகம் முழுவதும் காதியை பிரபலப்படுத்துவதில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. மேலும், மத்திய அரசின் வெற்றிகரமான முயற்சிகளால் நாட்டில் காதித் தொழில் ஒவ்வொரு நாளும் புதிய பரிமாணங்களை நிறுவி வருகிறது. எனவே, அனைத்துக் குடிமக்களும் குறைந்தது ஒரு காதி தயாரிப்பையாவது வாங்க வேண்டும். அவற்றை பண்டிகைக் கொண்டாட்டங்களின் போது உடுத்தி ‘உள்ளூருக்கான குரல்‘ என்ற மந்திரத்தை அனைவரும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லாரி மோதி இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு
கிழக்கு தில்லியில் ஆயுத விநியோகம்: மூவா் கைது

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

27.4.1976: தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

