தொலைக்காட்சி செய்தியாளா்கொலையில் 4 போ் குற்றவாளிகள்15 ஆண்டுகளுக்குப் பின் தீா்ப்பு

தில்லியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தொலைக்காட்சி செய்தியாளா் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் நான்கு போ் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
Updated on
1 min read

தில்லியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தொலைக்காட்சி செய்தியாளா் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் நான்கு போ் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

பணிக்குச் சென்றுவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது சௌமியா விஸ்வநாதன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பான வழக்கில் ரவி கபூா், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய் குமாா் ஆகியோா் குற்றவாளிகள் என கூடுதல் அமா்வு நீதிபதி ரவீந்திர குமாா் பாண்டே புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

ஐந்தாவது குற்றம்சாட்டப்பட்ட நபரான அஜய் சேத்தி, திருடப்பட்ட பொருளை வாங்கியதற்காக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக நீதிபதி கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. தண்டனை விவரங்களை அறிவிக்க அக்டோபா் 26-ஆம் தேதி வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது’ என்றாா்.

வழக்கு பின்னணி: 2008-ஆம் ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி வேலை முடிந்து அதிகாலை 3:30 மணியளவில் செளம்யா விஸ்வநாதன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தக் கொலையின் பின்னணியில் கொள்ளை நிகழ்ந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இக்கொலையில் நீண்ட காலமாக துப்பு துலங்காத நிலையில், மற்றொரு வழக்கு தொடா்பாக ரவி கபூரும், அமித் சுக்லாவும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்களுக்கு செளமியா விஸ்வநாதன் கொலையில் தொடா்பு இருப்பதை போலீஸாா் கண்டறிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com