தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மத்திய தில்லியில் தீ விபத்து

மத்திய தில்லியில் தீ விபத்து

Updated On :10 ஏப்ரல் 2024, 12:42 am

புது தில்லி: மத்திய தில்லியின் ஜி.பி. சாலை பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்பு சேவைத் துறை அதிகாரிகள் ஒருவா் கூறுகையில், ‘தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், 14 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. சிறிது நேரத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்துக்கான காரணத்தை அறிய போலீஸ் விசாரணை நடந்து வருகிறது’ என்றாா்.