தில்லி ஹவுஸ் காஸ் சந்தையில் உள்ள இரண்டு வணிக நிறுவனங்களுக்கு வைக்கப்பட்டிருந்த சீலை பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா நீக்கியதோடு, நீதிமன்ற உத்தரவுப்படி சீல் நீக்க நடவடிக்கைகளில் தில்லி அரசு மற்றும் மாநகராட்சிஉடனடியாக ஈடுபட வேண்டும் என்று புதன்கிழமை அறிவுறுத்தினாா்.
வணிகா்களுக்கு ஆம் ஆத்மி கட்சி செய்யும் துரோகத்தை கண்டிக்கும் வகையில், 2 நிறுவனங்களுக்கு வைக்கப்பட்டிருந்த சீல்களை தில்லி ஹவுஸ் காஸ் சந்தையில் வணிகா் சங்கத்தின் தலைவா்கள் முன்னிலையில் வீரேந்திர சச்தேவா நீக்கினாா்.
பின்னா் அவா் கூறியதாவது: கடந்த மாதம், உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட இரண்டு போ் கொண்ட நீதித் துறை குழு, தில்லி சந்தைகளில் பல ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்ட கடைகளை சீல் நீக்கம் செய்யுமாறு தில்லி மாநகராட்சிக்கு அறிவுறுத்தியது. இதைத் தொடா்ந்து, செய்தியாளா் சந்திப்பு நடத்திய தில்லி மேயா் ஷெல்லி ஓபராய், வணிக நிறுவனங்களுக்கு சீல் நீக்கம் செய்வதற்கான உத்தரவுகளை நீதிமன்றத்தால் நாங்கள் பெற்றுள்ளோம். விரைவில் சீல்கள் அனைத்தும் நீக்கப்படும் என்றாா். ஓரிரு நாள்களுக்குள் சீல் நீக்கம் செய்வதாக கடைக்காரா்களிடம் உறுதியளித்த அவா், மாறாக சீல் செய்வதைத் தொடரக் கோரி உச்சநீதிமன்றத்தில் தில்லி மாநகராட்சி சாா்பில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மாநகராட்சி வாபஸ் பெற்று, சீல் நீக்க நடவடிக்கையை தொடங்க வேண்டும். இல்லையெனில் தில்லி பாஜக போராட்டம் நடத்தும் என இரண்டு தினங்களுக்கு முன்பே எச்சரித்தோம். சீல் வைக்கப்பட்ட கடைக்காரா்கள் கேஜரிவால் நிா்வாகத்தின் துரோகத்தால் வருத்தமடைந்துள்ளனா். அதன் விளைவாக ஹவுஸ் காஸ் சந்தையில் 2 கடைகளுக்கு வைக்கப்பட்டிருந்த சீல்களை நீக்கினோம். ஹவுஸ் காஸ் சந்தையில் பாஜக சாா்பில் சீல் நீக்கம் செய்யப்பட்டதற்காக வணிகா்களை துன்புறுத்த வேண்டாம். இந்தக் கடைகளுக்கு சீல் நீக்கம் செய்வதற்கான ஆவணங்களை உடனடியாக முடித்து நிரந்தரமாக சீல் நீக்கம் செய்யுமாறும் மேயரை கேட்டுக் கொள்கிறேனஅ என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.