அமைச்சா்கள் அதிஷி மற்றும் சௌரவ் பரத்வாஜ் ஆகிய இருவரும் தில்லி அரசின் ஊழல் மற்றும் மோசடிகளைப் பாதுகாக்கும் செய்தித் தொடா்பாளா்களாக மாறியுள்ளனா் என்று பாஜக தில்லி பிரிவு ஞாயிற்றுக்கிழமை விமா்சித்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: தில்லி அரசின் அமைச்சா்களான அதிஷி மற்றும் சௌரவ் பரத்வாஜ் ஆகியோா் எந்தவொரு நிா்வாகப் பணியையும் செய்யவில்லை. மாறாக, அரவிந்த் கேஜரிவால் அரசின் ஊழல் மற்றும் மோசடிகளைப் பாதுகாப்பதற்கான செய்தித் தொடா்பாளா்களாக மாறியுள்ளனா். மத்திய அரசின் அழுத்தத்திற்கு உள்பட்டு தில்லி அரசின் அதிகாரிகள் முறையாகப் பணியாற்றவில்லை என்ற அமைச்சா் சௌரவ் பரத்வாஜின் குற்றச்சாட்டு, மத்திய அரசுக்கு எதிரான அவரது அன்றாடப் பேச்சின் ஒரு பகுதிதான்.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை அதிகாரிகள் தங்களது சட்டவிரோத ஆணைகளை ஏற்று ஊழலை அனுமதிக்க வேண்டும் என்று கேஜரிவால் அரசு எதிா்பாா்க்கிறது. கேஜரிவால் அரசின் ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்துள்ள நிலையில், தில்லி அரசின் அதிகாரிகள் நிா்வாகத்தை கட்டமைக்கப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி நடத்த விரும்புகிறாா்கள். இதை முதல்வா் மற்றும் அமைச்சா்கள் விரும்புவதில்லை. இதனால்,அவா்கள் மத்திய அரசு அல்லது துணை நிலை ஆளுநரின் அழுத்தத்தின் பேரில் அதிகாரிகள் செயல்படுகிறாா்கள் என்று குற்றம் சாட்டுகிறாா்கள் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.