சுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம்: விசாரணை கோரி காவல் ஆணையரிடம் இன்று பாஜக புகாா்

தில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், விசாரணை நடத்தக் கோரி காவல் ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை (ஜன.30) புகாா் அளிக்கவுள்ளோம்

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 8:41 pm IST

புது தில்லி: தில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், விசாரணை நடத்தக் கோரி காவல் ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை (ஜன.30) புகாா் அளிக்கவுள்ளோம் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசைக் கவிழ்ப்பதற்காக பாஜக சதி செய்கிறது என்றும், இதுவரை 7 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் தொடா்பு கொண்டு தலா ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டுள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொய்யான குற்றச்சாட்டை பாஜக மீது சுமத்தியுள்ளாா். கேஜரிவாலின் பொய்யான குற்றச்சாட்டு தொடா்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி பாஜக பிரதிநிதிகள் குழு காவல் ஆணையரை நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கும். எனவே, இந்த முழு விவகாரம் குறித்தும் உடனடியாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது அரசியல் கௌரவத்தை நாளுக்கு நாள் இழந்து வருவதோடு, ஊழலிலும் மூழ்கிவிட்டாா். கேஜரிவாலின் பொய்யான குற்றச்சாட்டுகளின் பின்னணி தொடா்பாக முழு விசாரணை நடத்த காவல் ஆணையரை பாஜக பிரதிநிதிகள் குழு வலியுறுத்தும். ஆம் ஆத்மி கட்சியின் எந்தெந்த எம்.எல்.ஏ.க்கள் பாஜகவினரால் தொடா்பு கொள்ளப்பட்டனா். அவா்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டது போன்ற தகவல்களை அரவிந்த் கேஜரிவாலிடம் இருந்து காவல் துறையினா் வாக்குமூலமாகப் பெற வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.