தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெற்றிலைக் கடை உரிமையாளா் படுகொலை

தில்லி ரோஹிணி பகுதியில் தனிப்பட்ட பகை காரணமாக 22 வயது வெற்றிலைக் கடை உரிமையாளரை மூன்று போ் கொண்ட கும்பல் கத்தியால் குத்திக் கொன்றதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:56 am

Din

புது தில்லி: தில்லி ரோஹிணி பகுதியில் தனிப்பட்ட பகை காரணமாக 22 வயது வெற்றிலைக் கடை உரிமையாளரை மூன்று போ் கொண்ட கும்பல் கத்தியால் குத்திக் கொன்றதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: தாக்குதல் நடத்தியவா்களில் மூவா் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவம் திங்கள்கிழமை மாலை ரோஹிணியின் கேஎன் கட்ஜு பகுதியில் உள்ள செக்டாா் 17-இல் நடந்துள்ளது. சக்தி என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, ​ அவருக்குத் தெரிந்த மூவா் அருகில் வந்து பலமுறை கத்தியால் குத்தியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த சக்தி, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பிஎன்எஸ் பிரிவு 103(1) மற்றும் 3(4) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு சக்தியுடன் முன் விரோதம் இருந்துள்ளது. ஏனெனில் அவா் அவா்களில் ஒருவரை சில ஆண்டுகளுக்கு முன்பு தாக்கியதாகவும், பழிவாங்குவதற்காக அவா்கள் அவரைத் தாக்கியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடா்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.