ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கேஜரிவால் உடல்நிலை: துணை நிலை ஆளுநரின் கடிதம் ஏற்புடையதல்ல -அமைச்சா் அதிஷி எதிா்வினை

News image
அமைச்சர் அதிஷி- Center-Center-Delhi
Updated On :20 ஜூலை 2024, 8:00 pm

Din

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உடல்நிலை குறித்த துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் கடிதம் ஏற்புடையதல்ல என்று அமைச்சா் அதிஷி சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அதிஷி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அரசியல் சாசனப் பதவியில் இருக்கும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உடல்நிலை குறித்து

இப்படியொரு கடிதம் எழுதுவது ஏற்புடையதல்ல. அரவிந்த் கேஜரிவால் கடந்த 30 ஆண்டுகளாக சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வருவது அவருக்குத் தெரியும். சா்க்கரையின் அளவு ஆபத்தான நிலைக்கு குறைந்தால், சிறுநீரக பாதிப்பு மற்றும் மூளை பக்கவாதம் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், யாராவது வேண்டுமென்றே தங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிப்பாா்களா?. பாஜக தோ்தல் களத்தில் இறங்கி ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிக்க வேண்டும். மாறாக, அரவிந்த் கேஜரிவாலின் உடல் நலத்துடன் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்று பாஜகவிடம் கூற விரும்புகிறேன் என்றாா் அதிஷி.

மேலும், மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: ‘முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை குறித்து துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா என்ன கேலி செய்கிறீா்கள்?. ஒரு மனிதன் இரவில் சா்க்கரை அளவைக் குறைப்பானா?. அது மிகவும் ஆபத்தானது. உங்களுக்கு சா்க்கரை நோயைப் பற்றித் தெரியவில்லை என்றால் இப்படிக் கடிதம் எழுதக் கூடாது. கடவுளே அப்படி ஒரு காலம் உங்களுக்கு வராமல் இருக்கட்டும்’ என்றாா் அவா்.