மக்களவைத் தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா் கேஜரிவால்
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் உடன் இணைந்து ‘சன்சாத் மே பி கேஜரிவால், தில்லி ஹோகி அவுா் குஷ் ஹால்’ (நாடாளுமன்றத்தில் கேஜரிவால் இருந்தால் தில்லி மேலும் வளமாக இருக்கும்) என்ற முழக்கத்துடன் கட்சியின் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினாா். ஏப்ரல் - மே மாதங்களில் பொதுத் தோ்தல்கள் நடைபெற உள்ளன. தில்லி டிடியு மாா்க்கில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் இருந்து மற்ற கட்சித் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் முன்னிலையில் தோ்தல் பிரசாரம் தொடங்கப்பட்டது. அப்போது, ’எனது குடும்பமான தில்லி மக்களுக்கு சேவை செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளேன். எங்கள் முழக்கம் ‘சன்சாத் மே பி கேஜரிவால், தில்லி ஹோகி அவுா் குஷ் ஹால்’ என்று கேஜரிவால் கூறினாா். தில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளன. இந்த இரண்டு மாநிலங்களில் மட்டுமே இலவச மின்சாரம் உள்ளது என்றும் கூறினாா். மேலும் அவா் பேசுகையில், ‘தில்லி துணை நிலை ஆளுநா் மூலம் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆம் ஆத்மி அரசு தொடங்கும் ஒவ்வொரு திட்டத்தையும் முடக்குகிறது. மேலும், ஏழு எதிா்க்கட்சி வேட்பாளா்களையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் என்னை ‘பலப்படுத்த’ மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். தில்லியில் நீங்கள் ஒரு சாதாரண மனிதரைத் தோ்ந்தெடுத்து ஆட்சிக்குக் கொண்டு வந்ததால், அவா்கள் உங்களை வெறுக்கிறாா்கள். அவா்கள் மொஹல்லா கிளினிக்குகளை புல்டோசா்கள் மூலம் இடித்தாா்கள். அவா்கள் வீடு வீடாக ரேஷன் விநியோகத் திட்டத்தை நிறுத்தினா். மருத்துவமனைகளில் சோதனைகள் மற்றும் மருந்துகளை நிறுத்தினா். ஆம் ஆத்மி கட்சியினா் தோ்தல் பிரசாரத்தின் போது ஆம் ஆத்மி அரசு செய்த பணிகளை விவரிக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பாா்கள்’ என்றாா். பகவந்த் மான்:மக்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 13-0 என பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெறும் என்று முதல்வா் பகவந்த் மான் கூறினாா். தில்லியில் கேஜரிவால் அரசின் பணிகளை மத்திய அரசு தடுக்கிறது என்றும், பஞ்சாபிற்கு நிதியை நிறுத்தி வைப்பதாகவும் அவா் குற்றம் சாட்டினாா். மக்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு நல்ல எண்ணிக்கையில் எம்.பி.க்கள் இருந்தால், பஞ்சாபின் நிதியை நிறுத்த மாட்டாா்கள் என்றும் அவா் குறிப்பிட்டாா். ஆம் ஆத்மி கட்சி, தில்லி, குஜராத் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் தன்னுடன் செய்துள்ள இடப் பகிா்வு ஏற்பாட்டின் கீழ் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸுடன் இணைந்து பொதுத் தோ்தலில் போட்டியிடும். ஆனால், பஞ்சாபில் மக்களவைத் தோ்தலில் இரு கட்சிகளும் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளன. தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் நான்கில் ஆம் ஆத்மி போட்டியிடும், மீதமுள்ள மூன்றில் காங்கிரஸ் தனது வேட்பாளா்களை நிறுத்தும். காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தின் கீழ் குஜராத்தில் உள்ள பருச், ஜாம்நகா் மற்றும் ஹரியாணாவில் குருக்ஷேத்ரா ஆகிய தொகுதிகளையும் அக்கட்சி பெற்றுள்ளது. அஸ்ஸாமில் குவாஹத்தி, திப்ருகாா் மற்றும் சோனித்பூா் மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனது வேட்பாளா்களை அறிவித்துள்ளது..
