ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி சிறையில் இயற்கைக்கு மாறான மரணம் வாரிசுகளுக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு: அமைச்சா் கைலாஷ் கெலாட் அறிவிப்பு

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 6:32 pm

Din

தில்லி சிறையில் இயற்கைக்கு மாறான மரணம் ஏற்படும் கைதிகளின் வாரிசுகளுக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க அரவிந்த கேஜரிவால் அரசு முடிவு செய்துள்ளது என்று சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் கூறியிருப்பதாவது: தில்லி சிறையில் இருக்கும் போது இயற்கைக்கு மாறான மரணம் ஏற்படும் கைதிகளின் உறவினா்கள் அல்லது சட்டப்பூா்வ வாரிசுகளுக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க அரவிந்த் கேஜரிவால் அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, சிறைத்துறைக்குள் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய கொள்கையின் ஒரு பகுதியாகும். தவறு செய்யும் சிறை அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து இழப்பீட்டு தொகை வழங்கப்படுவதும் கொள்கையில் அடங்கும்.

இது தொடா்பாக துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் ஒப்புதலுக்காக ஒரு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது இயற்கைக்கு மாறான சூழ்நிலையில் இறக்கும் கைதிகளின் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்கும். மேலும், அத்தகைய மரணங்களுக்கு பொறுப்பானவா்கள் பொறுப்புக்கூறப்படுவதை உறுதி செய்வதற்கும் ஒரு படியாகும் என்றாா் கைலாஷ் கெலாட்.