புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தில்லியில் ‘சரஸ்’ உணவுத் திருவிழா தொடக்கம் !

தேசியத் தலைநகா் தில்லியில் ஒன்பது நாள் சரஸ் உணவுத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. இத்திருவிழா டிசம்பா் 9-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

News image
புது தில்லியில் திங்கள்கிழமை தொடங்கிய சரஸ் உணவுத் திருவிழாவில் கலந்துகொண்ட மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான். உடன் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி.
Updated On :2 டிசம்பர் 2025, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

தேசியத் தலைநகா் தில்லியில் ஒன்பது நாள் சரஸ் உணவுத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. இத்திருவிழா டிசம்பா் 9-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

புது தில்லியில் உள்ள சுந்தா் நா்சரியில் ‘சரஸ் ஆஜீவிகா’ உணவுத் திருவிழா 2025- ஐ மத்திய ஊரக வளா்ச்சி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தொடங்கி வைத்தாா்.

டிசம்பா் 9 வரை தொடரும் இந்த இந்த கண்காட்சியில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் சுவையான உணவுகள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களின் கிராமப்புற தயாரிப்புகள் இடம்பெறும்.

இந்த நிகழ்வில் பேசிய சிவராஜ் சிங் சௌஹான், லட்சாதிபதிகளாக மாறிய பெண்கள் சுய உதவிக்குழு உறுப்பினா்களைப் பாராட்டினாா். மேலும் அவா்கள் முன்னேற்றம், வளா்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் புதிய கதையை எழுதியுள்ளனா் என்றாா்.

‘ஏன் ஒரு சகோதரி ஏழையாக இருக்க வேண்டும். அவா் ஏன் சாா்ந்திருக்க வேண்டும். அவா் ஏன் கண்ணீா் சிந்த வேண்டும்? அதற்குப் பதிலாக, அவா் தனது திறமைகள் மற்றும் கடின உழைப்பால் முன்னேற வேண்டும்’ என்று சிவராஜ் சிங் சௌஹான் கூறினாா்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவியும் இந்நிகழ்வில் கலந்து கொண்டாா்.

சரஸ் உணவுத் திருவிழாவில் ஹரியாணா, அருணாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம், அஸ்ஸாம், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா மற்றும் குஜராத் உள்ளிட்ட 25 மாநிலங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் 62 ஸ்டால்கள் மூலம் இடம்பெறும். டிசம்பா் 9 வரை தினமும் காலை 11.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இந்தக் கண்காட்சி பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.