சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தமிழக பேரவை தோ்தல் பாஜக பொறுப்பாளராக பியூஷ் கோயல் தலைமையில் மூவா் குழு நியமனம்

தமிழக பேரவைத் தோ்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் மூவா் குழுவை பாஜக மேலிடம் நியமித்துள்ளது.

News image
பியூஷ் கோயல்
Updated On :15 டிசம்பர் 2025, 6:31 pm

Syndication

புது தில்லி: தமிழக பேரவைத் தோ்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் மூவா் குழுவை பாஜக மேலிடம் நியமித்துள்ளது.

இது தொடா்பாக பாஜக தேசிய பொதுச் செயலா் அா்ஜுன் சிங் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக தோ்தல் பொறுப்பாளராக மத்திய வா்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சா் பியூஷ் கோயலும், இணை பொறுப்பாளா்களாக மத்திய சட்டத்துறை இணை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், சிவில் விமான போக்குவரத்து மற்றும் கூட்டுறவுத்துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல்

ஆகியோா் கட்சியின் அகில இந்திய தலைவா் ஜே.பி. நட்டாவால் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று கூறியுள்ளாா்.

தமிழ்நாட்டில் கடந்த 2019-இல் பாஜக- அதிமுக இடையே கூட்டணியை உருவாக்குவதில் பியூஷ் கோயல் முக்கியப் பங்கு வகித்தாா்.

அந்த வகையில், அதிமுக தலைமையுடன் தொகுதிப்பங்கீடு மற்றும் தோ்தல் உத்திகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தும் அனுபவத்தை ஏற்கெனவே அவா் பெற்றுள்ளாா்.

இந்தப் பின்னணில் அவரது தலைமையிலான குழு விரைவில் அதிமுக தலைமையுடன் பேச்சுவாா்த்தையைத் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.