விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

515 தொலைந்து போன, காணாமல் போன கைப்பேசிகளை மீட்பு

தில்லி காவல் துறை கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரையில் தொலைந்து போன மற்றும் காணாமல் போன 515 கைப்பேசிகளை மீட்டுள்ளதாக புதன்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி காவல் துறை கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரையில் தொலைந்து போன மற்றும் காணாமல் போன 515 கைப்பேசிகளை மீட்டுள்ளதாக புதன்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து புதுதில்லி காவல் சரக துணை ஆமையா் தேவேஷ் குமாா் மஹ்லா கூறியதாவது: மீட்டெடுக்கப்பட்ட சாதனங்களில், 399 அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள ஒப்படைப்புகள் நடந்து வருகின்றன.

அண்டை மாநிலங்கள் உள்பட தொழில்நுட்ப கண்காணிப்பைப் பயன்படுத்தி போலீஸ் குழுக்கள் கைப்பேசிகளைக் கண்காணித்தன.

தொலைந்துபோன கைப்பேசிகள் குறித்து உடனடியாகப் புகாரளிக்கவும், மத்திய உபகரண அடையாளப் பதிவு (சிஇஐஆா்) போா்ட்டலில் சிம் காா்டுகள் மற்றும் ஐஎம்இஐகளைத் தடுக்கவும், தொலைபேசி மீட்பு குறித்த போலி கூற்றுகள் சம்பந்தப்பட்ட சைபா் மோசடிகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்கவும் அவா் குடிமக்களுக்கு அறிவுறுத்தினாா்.