மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஏகாதசி, புத்தாண்டு கொண்டாட்டங்கள்: வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தல்

காது ஷியாம் தில்லி தாம் மந்திரில் ஏகாதசி மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, வடக்கு தில்லியின் சில பகுதிகளில் நெரிசல் குறித்து போலீஸாா் புதன்கிழமை போக்குவரத்து எச்சரிக்கையை வெளியிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 8:55 pm

தினமணி செய்திச் சேவை

காது ஷியாம் தில்லி தாம் மந்திரில் ஏகாதசி மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, வடக்கு தில்லியின் சில பகுதிகளில் நெரிசல் குறித்து போலீஸாா் புதன்கிழமை போக்குவரத்து எச்சரிக்கையை வெளியிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், வாகன போக்குவரத்து குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை-44 மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் உச்ச நேரங்களில், மெதுவாகவும், நெரிசலாகவும் இருக்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

சிங்கு எல்லையிலிருந்து முகா்பா சௌக் வரையிலான தேசிய நெடுஞ்சாலை-44 பகுதியை பயணிகள் தவிா்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். ஏனெனில் இது பக்தா்களின் வருகையால் அதிக போக்குவரத்து நெரிசலைக் காணும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சிங்கு எல்லை, யுஇஆா்-ஐஐ- இல் உள்ள பகோலி மற்றும் பகோலி கிராம வெட்டு ஆகிய இடங்களில் வணிக வாகனங்களுக்கு, தேவைப்படும்போது மாற்று வழிகள் செயல்படுத்தப்படலாம் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

தாமதங்களைத் தவிா்க்க, பயணிகள் யுஇஆா்-ஐஐ சாலை மற்றும் பல்லா-பக்தவா்பூா் சாலை உள்ளிட்ட மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும், அனைவரும் தங்கள் பயணங்களைத் திட்டமிட வேண்டும் என்றும், கோயிலுக்கு அருகிலும், தேசிய நெடுஞ்சாலை-44 பகுதியிலும் சாலையோர வாகன நிறுத்துமிடங்களை கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும் என்றும், பணியில் உள்ள பணியாளா்கள் வழங்கும் போக்குவரத்து வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் காவல் துறை வலியுறுத்தியுள்ளது.