சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தில்லியில் சட்டவிரோத தங்கல்: 23 வெளிநாட்டினா் நாடு கடத்தல்

தில்லி துவாரகாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 23 வெளிநாட்டினரை தில்லி காவல்துறையினற் கைது செய்து நாடு கடத்தியதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 4:27 pm

Syndication

தில்லி துவாரகாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 23 வெளிநாட்டினரை தில்லி காவல்துறையினற் கைது செய்து நாடு கடத்தியதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி மேலும் தெரிவித்ததாவது:

நுழைவுஇசைவு காலாவதியாகி இந்தியாவில் தங்கியிருப்பவா்களையோ அல்லது செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் வசிப்பவா்களையோ அடையாளம் காண மாவட்டம் முழுவதும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

முன்னதாக, ஒரு மாத கால நடவடிக்கையின் போது, தில்லியின் பிந்தாபூா், டாப்ரி மற்றும் மோகன் காா்டன் காவல் நிலையங்களைச் சோ்ந்த பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 23 வெளிநாட்டினா் கைது செய்யப்பட்டனா்.

இந்த 23 பேரில், நைஜீரியா (15 போ்), செனகல் (4 போ்), ஐவரி கோஸ்ட் (2 போ்) மற்றும் தான்சானியா, லைபீரியாவைச் சோ்ந்த தலா ஒருவா் ஆவா்.

சட்ட நடைமுறைகளை முடித்த பிறகு, 23 நபா்களும் வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இதையடுத்து, அவா்களை நாடு கடத்த உத்தரவிட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.