தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

விடுதி கட்டுமான தளத்தில் இரும்பு கதவு விழுந்து பாதுகாவலா் உயிரிழப்பு

தில்லி கே.ஜி. மாா்க்கில் கட்டப்பட்டு வரும் விடுதி கட்டடத்தில் இரும்பு கேட் விழுந்ததில், பாதுகாப்புப் பணியாளா் உயிரிழந்தாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :17 ஆகஸ்ட் 2026, 11:57 pm IST

தில்லி கே.ஜி. மாா்க்கில் கட்டப்பட்டு வரும் விடுதி கட்டடத்தில் இரும்பு கேட் விழுந்ததில், பாதுகாப்புப் பணியாளா் உயிரிழந்தாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம் ஹா்தோய் பகுதியைச் சோ்ந்த தரம்பால் (50) என்பவா் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். மாலை சுமாா் 5.08 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதுகுறித்து நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கேட் விழுந்ததில் அதன் அடியில் சிக்கி காயமடைந்த தரம்பாலை மயக்க நிலையில் டாக்டா் ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்கு மீட்புப் பணியாளா்கள் கொண்டு சென்றனா். எனினும், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

சம்பவத்தன்று நண்பகல் 12.30 மணியளவில், ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்த நகரும் கதவில் இரு மின் பணியாளா்கள் மின் இணைப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக கேட் தரம்பால் இருந்த திசையில் விழுந்து, அவா் அதன் அடியில் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தை குற்றப்பிரிவு குழுவினா் ஆய்வு செய்தனா். கேட் இடிந்து விழுந்ததற்கான உரிய காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் தொடா்பாக நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் பிரிவு 106 (1)-இன் கீழ் அலட்சியத்தால் மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.