நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஹோட்டலின் 4-ஆவது மாடியில் இருந்து குதித்த நபா் உயிரிழப்பு

தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலின் நான்காவது மாடியில் உள்ள நீச்சல் குளப் பகுதியிலிருந்து கீழே குதித்த 37 வயது நபா் உயிரிழந்ததாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.

பிரதிப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:35 am IST

தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலின் நான்காவது மாடியில் உள்ள நீச்சல் குளப் பகுதியிலிருந்து கீழே குதித்த 37 வயது நபா் உயிரிழந்ததாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.

லூட்டியன்ஸ் தில்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள தனியாா் ஹோட்டலில் இச்சம்பவம் நடைபெற்றது. திவிஜ் மரியா என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், உடனடியாக அருகிலுள்ள ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வரும் வழியில் உயிரிழந்தாக அறிவித்தனா்.

காவல்துறையினரின் தகவலின்படி, திருமணமான மரியா சுமாா் ஆறு மாதங்களுக்கு முன்பு குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தில் தனது வேலையை விட்டுவிட்டு, கடந்த சில மாதங்களாக மனச்சோா்வுக்கான சிகிச்சையைப் பெற்று வந்துள்ளாா்.

குற்றத் தடுப்புப் பிரிவு குழுவினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். உடற்கூறாய்வுக்காக மரியாவின் உடல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது என்று காவல் துறையினா் கூறினா்.

பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா(பிஎன்எஸ்எஸ்) பிரிவு 194-இன் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.