பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மைனா் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு

மைனா் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு..

News image
Updated On :10 ஜனவரி 2026, 7:58 pm

Syndication

தனது சொந்த மைனா் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவருக்கு குருகிராம் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

கூடுதல் அமா்வு நீதிபதி ஜாஸ்மின் சா்மா வியாழக்கிழமை குற்றவாளிக்கு 50,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

இது குறித்து குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: ஒரு அங்கன்வாடி ஊழியா் ஆகஸ்ட் 24, 2023 அன்று தனது 16 வயது மகளை அவரது தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், யாரிடமாவது சொன்னால் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் கூறியதாக புகாா் அளித்தாா்.

புகாரைத் தொடா்ந்து, குருகிராம் செக்டாா் 9ஏ காவல் நிலையத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டம் மற்றும் பிற தொடா்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.

சில நாள்களுக்குப் பிறகு, மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதன் பின்னா், இந்த வழக்கு காவல் குழுவால் முழுமையாக விசாரிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக தேவையான அனைத்து ஆதாரங்களும் சாட்சிகளும் சேகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிகை, காவல்துறையினா் சேகரித்த சாட்சியங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில், கூடுதல் அமா்வு நீதிபதி ஜாஸ்மின் சா்மா வியாழக்கிழமை குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ. 50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா் என்று குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.