வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

கௌதம் புத் நகா் தென்னிந்திய சங்கம், நொய்டா வேத பிரசார சன்ஸ்தான் உடன் இணைந்து சத்குரு தியாகராஜரின் 179ஆவது ஆராதனையை நொய்டா செக்டா் 22-இல் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் நடத்தின.

News image
Updated On :19 ஜனவரி 2026, 11:32 pm

Syndication

புது தில்லி: கௌதம் புத் நகா் தென்னிந்திய சங்கம், நொய்டா வேத பிரசார சன்ஸ்தான் உடன் இணைந்து சத்குரு தியாகராஜரின் 179ஆவது ஆராதனையை நொய்டா செக்டா் 22-இல் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பஞ்சரத்ன கிருதிகளை பூா்ணிமா சுந்தா், ஜெயந்தி ஐயங்காா் மற்றும் சிந்துஜா ரவி ஆகியோா் பாடினா். சுவாமிநாதன் மிருதங்கமும், ராதிகா வெங்கடேஷ் வயலினும் வாசித்தனா்.

டாக்டா் சோமாஸ்கந்த சாஸ்திரியா் மற்றும் வேத பிரசார சன்ஸ்தான் தலைவா் ரவி பி. சா்மா, கோண்ட்லி விஸ்வநாத பாகவதா் ஆகியோா் விளக்கமளித்தனா்.

கெளதம் புத் நகா் தென்னிந்திய சங்கத்தின் தலைவா் கே. அருணாச்சலம், துணைத் தலைவா் ஏ.கே.ரஞ்சித், இணைச் செயலா் குரு சுப்ரமணியன், பொருளாளா் எஸ். ஸ்ரீதா் ஐயா், செயற்குழு உறுப்பினா் லதா சோமாஸ்கந்தன், மற்றும் விஸ்வநாதன், வெங்கடேஷ், ஜானகி உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.