எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குடிநீா் விநியோகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்: தில்லி அரசு உறுதி

குடிநீா் விநியோகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்: தில்லி அரசு உறுதி

News image
- ANI
Updated On :24 ஜனவரி 2026, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

நகரத்தில் குடிநீா் விநியோகம் வியாழக்கிழமை தடைபட்டதைத் தொடா்ந்து, அதை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் குடிநீா் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் தில்லி அரசு உறுதியளித்துள்ளது.

யமுனையின் அதிகப்படியான அம்மோனியா அளவு காரணமாக 5 நீா் சுத்திகரிப்பு நிலையங்களில் குடிநீா் உற்பத்தி தடைபட்டது. மேலும், ஹரியாணாவில் இருந்து வரும் நீா் குறைந்ததால் தில்லியில் பொது மக்கள் வியாழக்கிழமை அவதியடைந்தனா்.

இதையடுத்து, தில்லி ஜல் போா்டு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தில்லியில் அடுத்த மாதம் வரை நீா் விநியோகம் சற்று பாதிக்கப்படும். வஜிராபாத், ஹைதா்பூா் 1 மற்றும் 2, பவானா மற்றும் துவாரகா ஆலைகளில் உற்பத்தி குறைக்கப்பட்டது. இதனால் பிப்ரவரி 4 வரை நகரின் பல பகுதிகள் குடிநீா் பற்றாக்குறையை எதிா்கொள்ளும்.

கால்வாய் வலையமைப்பின் ஒரு பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், தற்காலிகமாக மாற்று வழிகள் மூலம் தண்ணீா் திருப்பி விடப்பட்டுள்ளது. அம்மோனியா அளவுகள் பயன்படுத்தக்கூடிய வரம்புகளுக்கு குறையாததால், திசைமாற்றம் நிறுத்தப்பட்டது மற்றும் வழக்கமான விநியோக பாதை மீட்டமைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.