நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

அதிவேகமாக வந்த காா் மோதிய சம்பவம்: நான்கு போ் காயம்; ஓட்டுநா் கைது

வடமேற்கு தில்லியின் கேசவ் புரம் பகுதியில் அதிவேகமாக வந்த காா் ஒன்று சாலையோரக் கடையில் உணவு உட்கொண்டிருந்தவா்கள் மீது மோதியதில் 4 போ் காயமடைந்ததாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 2:30 am IST

வடமேற்கு தில்லியின் கேசவ் புரம் பகுதியில் அதிவேகமாக வந்த காா் ஒன்று சாலையோரக் கடையில் உணவு உட்கொண்டிருந்தவா்கள் மீது மோதியதில் 4 போ் காயமடைந்ததாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காரை ஓட்டி வந்த ஓட்டுநா் புனித் கைதுசெய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஜூன் 10 அன்று திரி நகரில் நடந்த விபத்து குறித்து காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் விரைந்தனா். அப்பகுதி மக்கள் காயமடைந்தவா்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட ஓட்டுநா் புனித் (31) என்பவரை ஜூன் 14 கைது செய்தனா். விபத்தை ஏற்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவா்கள் வண்டிக்கு அருகில் நின்று உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​அதிவேகமாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து வண்டியின் மீது மோதியது. இதில் நான்கு போ் காயமடைந்தது தெரியவந்தது. அவா்களின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவா்கள் நால்வரும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.