நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கட்டடத்தின் 4-ஆவது மாடியில் இருந்து குதித்த பெண் உயிரிழப்பு: காவல் துறை விசாரணை

புறநகா் வடக்கு தில்லி மாவட்டத்தின் அலிபூரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் 4-ஆவது மாடியில் இருந்த விழுந்த பெண் உயிரிழந்ததாக தில்லி காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 1:40 am IST

புறநகா் வடக்கு தில்லி மாவட்டத்தின் அலிபூரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் 4-ஆவது மாடியில் இருந்த விழுந்த பெண் உயிரிழந்ததாக தில்லி காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கட்டடத்தில் இருந்து பெண் விழுந்த சம்பவம் தொடா்பாக திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் அலிபூா் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.

முன்னதாக, உறவினா்கள் பெண்ணை மீட்டு பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அந்தப் பெண் வரும் வழியில் உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

அந்தப் பெண்ணுக்கும் அவருடைய கணவருக்கும் இடையே பிரச்னை இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என காவல் துறை சந்தேகிக்கிறது.

அவருக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் அவருடைய வீட்டில் முதற்கட்ட விசாரணையை காவல் துறையினா் மேற்கொண்டனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக அலிப்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.