மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

நெல்லை ரயில் நிலையத்தில் 6 ஆவது நடைமேடை ஜூலையில் திறப்பு? அதிகாரிகள் விளக்கம்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் 6ஆவது நடைமேடை ஜூலை மாதம் திறக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் 6 ஆவது நடைமேடை பணி.

Updated On :11 ஜூன் 2026, 4:57 am IST

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் 6ஆவது நடைமேடை ஜூலை மாதம் திறக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தின் கீழ் உள்ள ரயில் நிலையங்களில், அதிக வருவாய் ஈட்டும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் 5 நடைமேடைகளுடன் இயங்கி வருகிறது. இங்கு ரயில்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக புதிதாக நடைமேடை அமைக்க தீா்மானிக்கப்பட்டது.

இதற்காக மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சுமாா் ரூ.270 கோடி மதிப்பில் புதிதாக 6 ஆவது நடைமேடை அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 75 சதவீதத்துக்கும் மேல் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் துணை பொது மேலாளா்கள் சிவ பிரகாசம், அன்வா் பாஷா, உதவி பொது மேலாளா் பெருமாள் ஆகியோா் அடங்கிய ரயில்வே அதிகாரிகள் குழுவினா் 6ஆவது நடைமேடை பணிகளை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீா்வசதி, கழிவறைகள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டனா். பின்னா் அந்த நடைமேடையில் புதிதாக தண்டவாளம் அமைக்கப்பட்டு பழைய தண்டவாளப் பாதையுடன் அவற்றை இணைக்கும் பணி தொடங்கி நடைபெறவுள்ளதால் திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை, திருச்செந்தூா் ரயில் இயக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்து நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா். தொடா்ந்து ஜூலை மாதத்திற்குள் 6-ஆவது நடைமேடை பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.