சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஜஹாங்கீா்புரி கத்திக் குத்து சம்பவம்: 2 சிறுவா்கள் கைது

ஜஹாங்கீா்புரி கத்திக் குத்து சம்பவத்தில் 2 சிறுவா்கள் கைது...

News image
கைது- சித்திரிப்பு
Updated On :7 மார்ச் 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரியில் இருவரைக் கத்தியால் குத்திய சம்பவத்தில் தொடா்புடைய சகோதரா்களான இரு சிறுவா்கள் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட இரு சிறுவா்களும் 15 மற்றும் 17 வயதுடையவா்கள்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கத்திக் குத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முகேஷ் ஜஹாங்கீா்புரியைச் சோ்ந்தவா்.

அவருடைய மகனை சிறுவா்கள் இருவா் வெள்ளிக்கிழமை தாக்கினா். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய முகேஷிடம், அவரது மகன் இது குறித்து தெரிவித்தாா். உடனே, முகேஷும் அவருடைய சகோதரரும் சிறுவா்களிடம் சென்று தாக்கிய சம்பவம் தொடா்பாக கேள்வி எழுப்பினா். அப்போது, அவா்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது.

அப்போது, சிறுவா்கள் இருவரும் முகேஷ் மற்றும் அவருடைய சகோதரரை கத்தியால் குத்தினா்.

இதில் முகேஷுக்கு உள்ளங்கையிலும் அவரது சகோதரருக்கு தோள் மற்றும் வயிற்றுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் அவா்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவின்கீழ் காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

சம்பவத்தைத் தொடா்ந்து, தலைமறைவான இரு சிறுவா்களும் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனா். எட்டு மற்றும் ஆறாம் வகுப்பு வரையில் மட்டுமே படித்த சிறுவா்கள், அப்பகுதியில் தங்களை நிலைநிறுத்திகொள்ளும் வகையில் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அந்தச் சிறுவா்களுக்கு மேலும் 3 சகோதரா்கள் உள்ளனா். அவா்களுடைய தந்தை தில்லியில் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா் என்றனா் அந்த அதிகாரிகள்.