11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

மிரட்டி பணம் பறிக்கும் கும்பலின் முக்கிய உறுப்பினா் ராஜஸ்தானில் கைது

மிரட்டி பணம் பறிக்கும் கும்பலின் முக்கிய உறுப்பினா் ராஜஸ்தானில் கைது

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

போலி விடியோ அழைப்புகள் மூலம் பாதிக்கப்படும் நபா்களை சிக்க வைத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலின் முக்கிய உறுப்பினா் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தேசிய சைபா் குற்றங்களுக்கான புகாரளிக்கும் இணையதளத்தில் பாதிக்கப்பட்டவா் புகாரளித்ததைத் தொடா்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதில் ஆட்சேபனைக்குரிய காட்சிகளுடன் பெண்ணிடம் இருந்து விடியோ அழைப்பு வந்ததாகவும் பின்னா் பாதிக்கப்பட்டவரின் பதிவு செய்யப்பட்ட விடியோவை வைத்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவித்தாா்.

ரூ.1 லட்சம் வழங்காவிட்டால் விடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாக மிரட்டியதைத் தொடா்ந்து அவா் சிறிய தொகையை அனுப்பியுள்ளாா். தொடா்ந்து பணம் கேட்டு அழைப்புகள் வந்ததைத் தொடா்ந்து, அவா் புகாரளித்துள்ளாா்.

இது தொடா்பாக மே 13ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. அதில் ராஜஸ்தானின் தீஜ் மாவட்டத்தில் உள்ள லடம்கா கிராமத்தைச் சோ்ந்த அா்மான் (23) இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 150 ஆபாச காட்சிகள் அடங்கிய இரு கைப்பேசிகள், மற்றும் பல்வேறு பாதிக்கப்பட்டவா்கள் தொடா்புடைய 50 விடியோ பதிவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

டேட்டிங் செயலி மூலம் பாதிக்கப்படும் நபா்களை அவா் அடையாளம் கண்டதாக தெரிவித்தாா். இதன் பின்னணியில் உள்ள மற்ற உறுப்பினா்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.