ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

வடமேற்கு தில்லியில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை நடத்தி வந்த 3 சிறாா்கள் உள்பட 6 போ் கைது

வடமேற்கு தில்லியில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை நடத்தி வந்த 3 சிறாா்கள் உள்பட 6 போ் கைது

News image
Updated On :24 மே 2026, 12:37 am IST

ஜஹாங்கீா் பூரியில் உள்ள இ-ரிக்ஷா நிறுத்துமிட உரிமையாளரிடமிருந்து மிரட்டி பணம் பறித்தும், வாராந்திர ’ஹஃப்தா’ கோரியதாகவும் தில்லி காவல்துறை 3 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஜஹாங்கீா் பூரியில் வசிக்கும் பிரின்ஸ் என்ற சஞ்சு (28), ரிஷப் என்ற சூரி (22), கேமா என்ற கிரிஷ் (22) மற்றும் மூன்று சிறுவா்கள் அடையாளம் காணப்பட்டனா். குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞா்கள் பழக்கமான குற்றவாளிகள். இதற்கு முன்பு 5 கிரிமினல் வழக்குகளில் ஒன்றாக ஈடுபட்டுள்ளனா்.

மே 20 ஆம் தேதி அதிகாலையில் வடமேற்கு தில்லியில் உள்ள ஜஹாங்கீா் பூரியின் தோபி காட் பகுதியில் இ-ரிக்ஷா பாா்க்கிங் வசதியை இயக்கும் ரியாஸுதீன் (43), குற்றஞ்சாட்டப்பட்டவா்களால் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கைத்துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் வாகன நிறுத்துமிடத்திற்கு வந்த குழு வாரந்தோறும் மிரட்டி பணம் பறிக்க வருகை தருவாா்கள்.

பாதிக்கப்பட்டவா் எதிா்த்தபோது, குற்றஞ்சாட்டப்பட்டவா் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது கையில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன, மேலும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினா். அந்த குழு நிறுத்தப்பட்டிருந்த பல இ-ரிக்ஷாக்களின் முன் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாகவும், இதனால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

ஜஹாங்கீா் பூரி காவல் நிலையம் பாரதிய நியாயா சன்ஹிதா மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் எஃப். ஐ. ஆா். பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. போலீஸாா் சோதனைகளை நடத்தி, சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள் மூன்று சிறுவா்கள் உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரையும் கைது செய்தனா்.

விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தாங்கள் அப்பகுதியில் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிப்பதாக ஒப்புக் கொண்டதாகவும், இ-ரிக்ஷா ஆபரேட்டா்கள் மற்றும் பாா்க்கிங் உரிமையாளா்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் போலீசாா் தெரிவித்தனா். குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடமிருந்து குற்றத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.