ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஊராட்சி ஒன்றியம் ஆக்கப்படுமா ஊத்துமலை?

ஆலங்குளம், டிச.25: திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊத்துமலையை தலைமையிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்பட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.  ஆலங்குளம் ஊராட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:50 am

வை. இராமச்சந்திரன்

ஆலங்குளம், டிச.25: திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊத்துமலையை தலைமையிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்பட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

 ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 28 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்தில் ஆலங்குளம் தென்பகுதியில் உள்ளது. அனைத்து ஊராட்சிகளும் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளன.

 குறிப்பாக ஊத்துமலை, மேலக்கலங்கல், கீழக்கலங்கல், நவநீதகிருஷ்ணபுரம், வாடியூர், கருவந்தா, அச்சங்குட்டம், குறிச்சான்பட்டி, மேலமருதப்பபுரம், பலபத்திரராமபுரம், மருக்கலான்குளம், வடக்கு காவலாக்குறிச்சி, தெற்கு காவலாக்குறித்தி, மேலவீராணம், கீழ வீராணம் உள்ளிட்ட 15 ஊராட்சிப் பகுதிகள் இதில் அடங்கும்.

 ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள குருவன்கோட்டை, நல்லூர், சிவலார்குளம், அய்யனார்குளம், குறிப்பன்குளம், நெட்டூர், அகரம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு ஆலங்குளம் ஒன்றியம் மட்டுமன்றி தாலுகாவும், பேரவைத் தொகுதியும் ஆகும்.

 ஆனால், ஊத்துமலை சுற்று வட்டார ஊராட்சிகளைப் பொறுத்தவரை வட்டாட்சியர் அலுவலகம் வீ.கே.புதூரும், பேரவைத் தொகுதி தென்காசிக்கும் உள்பட்டது. ஒன்றிய அளவிலான பணிகளுக்கு மட்டுமே ஆலங்குளம் வரவேண்டியுள்ளது.

 பொதுவாக, வடக்குப் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அளவிலான பணிகளுக்கு ஆலங்குளம் வர பலமணி நேரம் பஸ்ஸýக்காக காத்திருந்து, அலுவலகம் வந்து வீடு திரும்ப இரவாகி விடுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

 மேலும் வட பகுதியைப் பொறுத்தவரை பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. ஊத்துமலையை தலைமையிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஏற்படுத்தப்பட்டால், ஊத்துமலை மட்டுமன்றி அப்பகுதியில் உள்ள கிராம ஊராட்சிகளும் வளர்ச்சிபெறும்.

 ஊத்துமலையை தலைமையிடமாகக் கொள்ளும்போது, கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கருதினால் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராஜகோபாலப்பேரி, வி.கே.புதூர் உள்ளிட்ட சில கிராம ஊராட்சிகளையும் இணைக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.