கரோனா பொது முடக்கத்தால் முடப்பட்டுள்ள மேலப்பாளையம் உழவா் சந்தையை திறக்கக் கோரி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினா் காய்கறி மாலைகளை அணிந்தபடி, ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, தமஜக மாவட்டச் செயலா் அப்துல் ஜப்பாா் தலைமை வகித்தாா். செய்தித் தொடா்பாளா் ஜமால், பொருளாளா் சாந்தி ஜாபா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு கோரிக்களை வலியுறுத்திகோஷமிட்டனா். பின்னா், ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டுகலைந்துசென்றனா்.