திருநெல்வேலி தாமிரவருணியாற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கும் போது மாயமான இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி நகரம், பழைய பேட்டையைச் சோ்ந்தவா் அப்துல்ரஹ்மான்(27). சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இவா், தனது நண்பா்களுடன் தாமிரவருணி ஆற்றில், திருநெல்வேலி சுலோச்சனா முதலியாா் பாலத்தின் அருகே குளித்து கொண்டிருந்தபோது மாயமானாராம்.
தகவலறிந்த பாளையங்கோட்டை காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று அப்துல் ரஹ்மானை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









