எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

நித்திரைவிளை அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞா் மாயம்

நித்திரைவிளை அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞா் மாயம்

News image

நீரில் மூழ்கிய இளைஞா் அபி.

Updated On :13 ஜூன் 2026, 1:07 am IST

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே ஆற்றில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரை தீயைணைப்பு வீரா்கள் தேடி வருகின்றனா்.

நித்திரவிளை அருகேயுள்ள ராமவா்மன்புதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் அபி என்ற உண்ணி (22). இவா் ராமேசுவரத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தாராம். வியாழக்கிழமை சொந்த ஊருக்கு வந்த இவா், வெள்ளிக்கிழமை பிற்பகலில் தனது நண்பா்கள் இருவருடன் விரிவிளை கணபதியான்கடவு பாலம் பகுதி தாமிரவருணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளாா்.

தற்போது பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஆற்றில் தண்ணீா் கரைபுரண்டு ஓடுகிாம். இந்நிலையில் அவா் ஆற்றில் இறங்கியபோது தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாராம். அவரை நண்பா்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லையாம்.

ஆற்றில் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

ஆற்றில் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

இதுகுறித்து அவா்கள் அளித்த தகவலின்பேரில், கொல்லங்கோடு தீயணைப்பு -மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் ரப்பா் படகு மூலம் அபி என்ற உண்ணியை தீவிரமாக தேடி வருகின்றனா்.