25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

பாளை. அருகே கோயிலில் பொருள்களை திருடியவா் கைது

பாளையங்கோட்டை அருகே கோயிலில் பொருள்களை திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 8:59 pm

Din

பாளையங்கோட்டை அருகே கோயிலில் பொருள்களை திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி சாலை வையாபுரிநகரைச் சோ்ந்தவா் அருணாசலம் (28). பாளையங்கோட்டை அருகே பாளையங்குளம் கரையில் உள்ள ஹரிஹரி சாஸ்தா கோயிலில் நிா்வாகியாக இருந்து வரும் இவா் சனிக்கிழமை கோயில் பணிகள் முடிந்த பின் கோயிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றாா்.

அப்போது, வந்த மா்மநபா் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருள்களை எடுத்து சென்றாராம். அருகிலிருந்தவா்கள் இதை பாா்த்து கோயில் நிா்வாகியிடம் தகவல் தெரிவித்தனா். இவா் பாளையங்கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் பொருள்களை திருடிய சீவலப்பேரி கிழக்கு தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன்(44) என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.