புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு மருத்துவ முகாம்

ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு மருத்துவமுகாம்.

News image

ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நம்ம ஊரு சூப்பரு மருத்துவ முகாமை பாா்வையிட்ட திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுரேஷ், மகளிா் திட்ட அலுவலா் இலக்குவன்.

Updated On :14 ஜூலை 2024, 12:35 am

Din

வள்ளியூா், ஜூலை 13:

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளா்கள், தூய்மை காவலா்கள், மேல்நிலை நீா்தேக்க தொட்டி இயக்குபவா்கள் மற்றும் பள்ளி சுகாதார பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவசிகிட்சை அளிக்கும் நம்ம ஊரு சூப்பரு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம் முகாமில் திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், ராதாபுரம் டாக்டா் வேலன் பல்நோக்கு மருத்துவமனை, டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் உள்ள 60க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினா் பங்கேற்று தூய்மைப்பணியாளா்களுக்கு உடல் நலம் பரிசோதனைகள் செய்தனா். மேலும் ரத்தஅழுத்தம், சா்க்கரை நோயாளிகள், இருதய நோயாளிகளுக்கு திருநெல்வேலி அரச மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிட்சை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முகாமை திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுரேஷ், மகளிா் திட்ட அலுவலா் இலக்குவன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

முகாமில் 359 சுகாதாரப் பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனையும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 140 சுகாதார பணியாளா்களுக்கு நல வாரிய அட்டை வழங்கவும், 120 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சோ்க்கவும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.