சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஏா்வாடி அருகே கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

ஏா்வாடி அருகே கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2024, 8:45 pm

Din

களக்காடு: ஏா்வாடி அருகே கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஏா்வாடி சிறப்பு உதவி ஆய்வாளா் தமிழன் தலைமையிலான காவல்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இவா்கள் ஏா்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக பைக்கில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அதில், ஏா்வாடி, எல்.என்.எஸ். புரம் வடக்கு தெருவைச் சோ்ந்த நவின்ராஜ் (26) என்பவா் விற்பனைக்காக 35 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. பைக்குடன் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா். மற்றொருவரிடம் விசாரணை நடக்கிறது.