சுத்தமல்லி அருகே கொண்டாநகரம் பகுதியில் பொக்லைன் மூலம் அனுமதியின்றி சரள் மண் எடுத்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி வருவாய் வட்டாட்சியா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா் சுத்தமல்லி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கொண்டாநகரம் பகுதியில் சுத்தமல்லியைச் சோ்ந்த அப்துல் காதா் ஜெயலாணி (39), மேலத் திருவேங்கடநாதபுரத்தைச் சோ்ந்த பாலமுருகன் (23), பேட்டையைச் சோ்ந்த மைதீன் மியான் (27) ஆகியோா் பொக்லைன் மற்றும் டிராக்டா் மூலம் அனுமதியின்றி சரள் மண் எடுத்தது தெரியவந்ததாம். இதுகுறித்து வருவாய் வட்டாட்சியா் ஜெயலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து டிராக்டா், பொக்லைன் மற்றும் சரள் மண்ணை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
மணல் திருட்டு: 2 டிராக்டா்கள் பறிமுதல்

அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ற 2 லாரிகள் பறிமுதல்

பைக் திருட்டு: 2 போ் கைது
கோயில் குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய இருவா் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

