பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மூலைக்கரைப்பட்டி அருகே நாய்கள் கடித்து 24 ஆடுகள் பலி

மூலைக்கரைப்பட்டி அருகே நாய்கள் கடித்து 24 ஆடுகள் பலி

Updated On :3 மார்ச் 2024, 1:50 am

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே நாய்கள் கடித்ததில் 24 ஆடுகள் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள பருத்திப்பாடு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி (45). ஆடுகள் வளா்த்து வரும் இவா், குட்டி ஆடுகளை கிடையில் தனியாக அடைத்து வைத்திருந்தாா். வியாழக்கிழமை இரவு கிடை அருகே உறங்கிவிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டுக்குச் சென்றாராம். திரும்பிவந்து பாா்த்தபோது, கழுத்தில் கடிபட்ட நிலையில் 24 ஆடுகள் இறந்துகிடந்தனவாம். தெருநாய்கள் அல்லது வேட்டை நாய்கள் கடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.