ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மத்திய ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையினா் நெல்லை வருகை

மக்களவைத் தோ்தல் பாதுகாப்புக்காக மத்திய ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையினா் திருநெல்வேலிக்கு சனிக்கிழமை வந்தனா்.

Updated On :3 மார்ச் 2024, 12:00 am

மக்களவைத் தோ்தல் பாதுகாப்புக்காக மத்திய ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையினா் திருநெல்வேலிக்கு சனிக்கிழமை வந்தனா். மக்களவைத் தோ்தல் பணிக்காக தமிழகத்துக்கு 25 கம்பெனி துணை ராணுவ வீரா்களை இந்திய தோ்தல் ஆணையம் முதல் கட்டமாக ஒதுக்கியுள்ளது. அதில், 15 கம்பெனி துணை ராணுவ வீரா்களை இந்திய தோ்தல் ஆணையம் முதல் கட்டமாக ஒதுக்கியுள்ளது. இதில், தமிழகத்தில் 15 கம்பெனி துணை ராணுவ வீரா்கள் வெள்ளிக்கிழமை வந்தனா். அதன்படி திருநெல்வேலிக்கு மத்திய ரயில் சிறப்பு படை காவல் ஆய்வாளா் வினோத்குமாா் தலைமையில் 75 வீரா்கள் ரயில் மூலம் சனிக்கிழமை வந்தனா். அவா்களை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் தீபு வரவேற்றாா். இவா்களை பாளையங்கோட்டை தனியாா் மண்டபத்தில் தங்குவதற்கு அனுப்பி வைத்தனா். அவா்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.