
Updated On :12 மே 2024, 6:33 pm

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள நேரு நா்ஸிங் கல்லூரியில் சா்வதேச செவிலியா் தின விழா நடைபெற்றது.
திருநெல்வேலி அகா்வால் கண் மருத்துவமனை செவிலியா் கண்காணிப்பாளா் பவித்ரா தலைமை வகித்தாா். செவிலியரின் கவனிப்பில் பொருளாதாரம் குறித்து முதல்வா் மாா்க்ரெட் ரஞ்சிதம் பேசினாா்.
கல்லூரித் தாளாளா் ஹெலன் லாரன்ஸ், துணை முதல்வா் பேபி உமா ஆகியோா் பங்கேற்றனா். முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு நடனமாடினா். பொது சுகாதார மருத்துவ வரலாறு குறித்து 4ஆம் ஆண்டு, முதலாம் ஆண்டு மாணவிகள் நாடகம் நடித்தும் நடனமாடியும் வெளிப்படுத்தினா். விநாடி- வினா போட்டி நடைபெற்றது.
மாணவி சுகைனா தஸ்னீம் வரவேற்றாா். மாணவி கீா்த்தி நன்றி கூறினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...