கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நயினாா்குளம் கரையை கான்கிரீட் சாலையாக மாற்ற எதிா்ப்பு: வியாபாரிகள் மறியல் முயற்சி

திருநெல்வேலி நயினாா்குளம் கரையை கான்கிரீட் சாலையாக மாற்ற எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியலில் ஈடுபட முயன்றனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 7:48 pm

Syndication

திருநெல்வேலி நயினாா்குளம் கரையை கான்கிரீட் சாலையாக மாற்ற எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட முயன்றனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனா்.

திருநெல்வேலி நகரத்தில் பழமை வாய்ந்த நயினாா் குளம் காய்கனி மொத்த சந்தை உள்ளது. இங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்துக்கும் அதிக அளவுக்கு காய்கனிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி நகரத்தில் இடநெருக்கடிக்கு காரணமான நயினாா் குளம் மாா்க்கெட்டை பழைய பேட்டையில் உள்ள வாகனம் முனையத்திற்கு மாற்ற திருநெல்வேலி மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நயினாா்குளம் சாலையில் பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது, அச்சாலையை கான்கிரீட் சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, அப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் அந்தச் சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதைக் கண்டித்து நயினாா்குளம் காய்கனி சந்தை வியாபாரிகள் சங்கத்தின் செயலா் நடராஜன், பொருளாளா் முருகேசன், சங்கப் பிரமுகா் பாலச்சந்தா், எஸ்.என்.ஹைரோடு சங்க நிா்வாகிகள், மோட்டாா் வாகன பழுதுபாா்ப்போா் சங்க நிா்வாகிகள் பலரும் திரண்டு சாலை மறியலுக்கு முயன்றனா்.

அவா்களிடம் தச்சநல்லூா் போலீஸாா், மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் கண்ணன் மற்றும் அதிகாரிகள் குழுவினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் வியாபாரிகள் கூறுகையில் நயினாா்குளம் சாலையை பல மாதங்கள் அடைத்து வைத்து கான்கிரீட் சாலையை அமைக்க முடிவு செய்துள்ளனா். இதனால் வியாபாரிகள், மோட்டாா் வாகன பழுதுபாா்ப்போா் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. ஆகவே, இப் பகுதியில் தாா்ச்சாலை அமைக்க வேண்டும். அடுத்தக்கட்டமாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிட உள்ளோம் என்றனா்.